Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து - 14 பேர் காயம்


காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த  பேருந்து நேற்றைய தினம் நள்ளிரவு விபத்துக்கு உள்ளானதில், 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சேருநுவர - கந்தளாய் வீதியில் சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வளைவுக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ் விபத்திற்குள்ளாகும் போது பஸ்ஸில் 49 பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்து காரணமாக காயமடைந்த பஸ் சாரதி, பஸ் நடத்துடனர் உட்பட 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சாரதியும் 9 பயணிகளும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

No comments