கண்டியில் மின்சார வேலியில் சிக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கண்டி, கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய வயோதிபர் ஆவார்.
கொட்டகேதெனிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிற்கு நேற்றைய தினம் சென்ற போது, காணியை சுற்றி சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தவுலகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments