கொழும்பில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காரில் பயணித்த சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காரை கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் சோதனைக்காக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட போதிலும், அந்த உத்தரவை மீறி கார் வேகமாக பயணித்தமையினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
No comments