Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிறு வயதில் கர்ப்பம் தரித்தல் அதிகரிப்பு


2024 ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் 213 ஆக அதிகரித்துள்ளதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

2023 ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரித்த 167 சம்பவங்கள் பதிவாகியுள்ளது , 2024 ஆம் ஆண்டில் இது அதிகரித்துள்ளது.

2023 மற்றும் 2024 ஆண்டுகளை ஒப்பிடும்போது சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் எந்த வித்தியாசமும் இல்லை 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான தரவுகளைப் பார்க்கும்போது, ​​குறிப்பிடத்தக்க குறைவு அல்லது அதிகரிப்பு எதுவும் இல்லை.

உதாரணமாக, இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் அதிகமாக பதிவாகின்றது.

இதில் 16 வயதிற்கு குறைந்த காதால் உறவால் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக  சம்பவங்களே பெரும்பாலானவை ஆகும். அதாவது இது  விருப்பப்படி நடப்பவையாகும்.

2023 இல் 1,237வும் 2024 இல் 1,254வும் பதிவாகியுள்ளன. ஆனால் 2023 இல் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் 167 பதிவாகியுள்ள நிலையில், இது 2024 ஆம் ஆண்டில் 213 ஆக அதிகரித்துள்ளது.

இதனால்  இந்த சிறுமிகள் பாதிக்கப்படுவதோடு பிறக்கும் குழந்தையும் பாதிக்கும்.

இந்த சிறுமிகள் பெரும்பாலும் கல்வித் துறையை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். "இந்த நிலைமை குறிப்பாக விவாதிக்கப்பட வேண்டும்." என்றார்.

அத்துடன் சிறுவர்களை கொடுமைப்படுத்தும் சம்பவங்களில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2023 இல் 103 ஆகவும், 2024 இல் 123 ஆக அதிகரித்துள்ளதாகவும் ரேணுகா ஜயசுந்தரா மேலும் தெரிவித்தார்.

No comments