Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மானிப்பாயில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - 300 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது


யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு பெருமளவிலான கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்கள் பொலிஸாரால் மீட்டப்பட்டுள்ளதுடன் ,  சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்றைய தினம் வியாழக்கிழமை  முற்றுகையிடப்பட்டது .  

குறித்த முற்றுகையின் போது 330   லீற்றர் கோடா,  15 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பதார்த்தங்கள் ,  தயாரிக்க பயன்படுத்தும் சில உபகரணங்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். 

No comments