Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்


வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

 வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்றவற்றை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுத்தனர். 

 ஆரம்ப நிகழ்வு உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து யாழ் நகர்ப்பகுதிக்குள் பேரணியும் துண்டுப்பிரசுரம் வழங்கலும் இடம்பெற்றது. தொடர்ந்து விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.




No comments