Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இந்திய துணைத்தூதரகத்தால் பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு


பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய மக்களின் பங்களிப்புடன் வடமராட்சி பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

யாழ் இந்திய துணைதூதுவராலயத்தினால்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை செல்வச்சந்நிதி ஆலய சூழலில் உள்ள மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

யாழ் இந்திய துணை தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு பொங்கல் பொதிகளை வழங்கி வைத்தனர்.

அதேவேளை ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கும் நேற்றைய தினம் பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 










No comments