Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இராணுவத்தின் 73 துப்பாக்கிகள் துப்பாக்கிகள் மாயம்


இலங்கை இராணுவ முகாமில் இருந்து காணாமல் போயிருந்த  73 , T56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களிடம் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

களுத்துறையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில். 

துப்பாக்கிகள் காணாமல் போனமை தேசிய பாதுகாப்புக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில், காணாமல் போன ஆயுதங்களில் 38 ஆயுதங்களை அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டுள்ளதுடன் மீதமுள்ளவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என 13 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு கருதி மீதமுள்ள ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என மேலும் தெரிவித்தார். 

No comments