இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ தலைமையில் இலங்கையில் பணியாற்றும் ஐ.நா.வின் அனைத்து முகவர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான வடக்கு மாகாண அலுவலர்களையும், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களையும் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தனித் தனியாக சந்தித்துக் கலந்துரையாடினர்.
முன்னதாக, வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகவும், அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண ஆளுநருடன், ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருடன், ஐ.நா.வின் அனைத்து முகவர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
No comments