பண்டாரகமை - கெஸ்பேவ பிரதான வீதியில் கம்மன்பில வாவிக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த காரை ஓட்டிய இளைஞன் பண்டாரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments