யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இன்றைய தினம் காலையில் சென்ற பிரதமர் , பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன் , பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் , மாணவர்களுடனும் கலந்துரையாடி இருந்தார்.
யாழ்ப்பாண இந்துக்கல்லூரியை தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
தொடர்ந்து இன்றைய தினம் மாலை , சுழிபுரம் , ஏழாலை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்
நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
யாழில் பிரதமர்
Related Posts
யாழில் ஆடுகளை திருடிய குற்றத்தில் இருவர் வாகனத்துடன் கைது
Unknown June 14, 2025
படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா - பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டும்
Unknown June 14, 2025
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் 25ஆம் திகதி யாழுக்கு விஜயம்
Unknown June 14, 2025
Subscribe to:
Post Comments (Atom)