யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளளார்
பலர் கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் , குருநகர் பகுதியில் இருந்து ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கடலில் விபத்துக்கு உள்ளானதில் , படகில் இருந்த பலரும் கடலினுள் விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது , படகில் பயணித்தவர்கள் எண்னிக்கை தெரியாத நிலையில் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் அப்பகுதி கடற்தொழிலாளர்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.











No comments