Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பேச்சுவார்த்தைக்கு வந்த இந்திய மீனவர்களின் பிரதிநிதியை கைது செய்ய முயற்சி


இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த இலங்கை வந்த இந்திய மீனவர்கள் பிரதிநிதிகளில் ஒருவர் இலங்கையில் இருந்து தப்பியோடியுள்ளார் 

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் பேச்சுக்களை நடாத்த இந்தியாவில் இருந்து மீனவர்களின் பிரதிநிதிகள் ஐவர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். 

குறித்த ஐவரில் ஒருவரின் படகு கடந்த மாதம் மன்னார் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் படகில் இருந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், படகு உரிமையாளர் எனும் வகையில் குறித்த நபருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அந்நிலையில் , குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று , அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இதனை அறிந்த படகின் உரிமையாளர் , அவசர அவசரமாக நாட்டில் இருந்து விமானம் ஊடாக வெளியேறியுள்ளார்.

No comments