இலங்கை அரசாங்கம் 11 இந்திய மீனவர்களை விடுவித்தமைக்கு நன்றி தெரிவித்தும். இலங்கை - இந்திய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 யாழ்ப்பாண மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன் பிடிக்காக கடலுக்கு சென்ற ஞானராஜ் மற்றும் பூலோகன் ஆகிய இரு மீனவர்களும் படகின் இயந்திரம் பழுதடைந்தமையால் ,இராமநாதபுரத்தை அண்டிய கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் , இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்
அதனை அடுத்து புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 யாழ்ப்பாண மீனவர்களையும் இந்திய அரசாங்கம் விடுவித்துள்ளது.
அவர்கள் இருவரும் மிக விரைவில் விமான மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
No comments