Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக்குழுக் கலந்துரையாடல்


பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக்குழுக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட  செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இக் கூட்டத்தில் பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் பிரதேச செயலகங்களுடன் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்த வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக   அரசாங்க அதிபர் அவர்களால் ஆராயப்பட்டு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. 

இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட, பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டார்கள்.





No comments