Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கனமழைக்கு வாய்ப்பு


இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவுக்கு ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments