Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொலிசாரை மோத முற்பட்ட டிப்பர் மீது துப்பாக்கி சூடு


மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பொலிஸார் மீது மோத முற்பட்ட வேளை, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. 

டிப்பரை வீதி சோதனை கடமையில் இருந்த பொலிஸார் இடைமறித்தபோது, சமிக்ஞை கட்டமைப்பை மீறி பொலிசார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்டபோதே பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தை தொடர்ந்து குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டது.  அதனை அடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டள்ளதோடு, டிப்பர் வாகனம் மற்றும் அதனுள் இருந்த சட்டவிரோத மணல் என்பவை அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments