Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முதலீட்டாளர்களுக்கு வடக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை - ஆளுநர் கவலை


எமது அதிகாரிகள் ஒரு சிலர் முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கால் இழுத்தடிக்கின்றார்கள் என்பது தெரியும். அதற்காக எமது மாகாணத்துக்கு முதலீடு செய்ய வரும் உங்கள் முயற்சிகளை தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், 'யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் - 2025' தலைப்பிலான கலந்துரையாடல் அரியாலையில் தனியார் விருந்தினர் விடுதியில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தனது உரையில், 

வடக்கு மாகாணம் இன்னமும் வர்த்தக ரீதியான சவால்களை எதிர்கொள்கின்றது. போர் காரணமாக எமது பொருளாதாரம் பல்வேறு தளங்களில் பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றது. 

பல உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட உட்கட்டமைப்பு, மூலதனத்துக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சந்தை வாய்ப்புகளுடன் தினமும் போராடுகின்றன. எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள், திறன் பற்றாக்குறைகள் மற்றும் அவற்றின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைத் தடுக்கும் ஒழுங்குமுறை சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றன.

இந்தத் தடைகள் இருந்தபோதிலும், கனேடிய அரசாங்கம் மற்றும் இலங்கை - கனடா வணிக மன்றத்தின் உறுதியான ஆதரவு, பொருளாதார மீட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

ஒன்றாக வேலை செய்வதன் மூலம், முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தலாம், ஒரு மாறும் வணிக சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தலாம். நிலையான முயற்சி மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளுடன், வடக்கு இலங்கை ஒரு துடிப்பான பொருளாதார மையமாக உருவாக முடியும். கனேடிய அரசாங்கத்தின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் எங்கள் வர்த்தக சமூகத்தின் கூட்டு விருப்பத்துடன், வடக்கு மாகாணம் செழித்து வளர்வதை உறுதிசெய்து, அனைவருக்கும் நீடித்த பொருளாதார உறுதிப்பாட்டையும் செழிப்பைப் பாதுகாக்க முடியும் என ஆளுநர் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 


No comments