நடைபெற்று வரும் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
அந்நிலையில் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு மாவட்ட செயலரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தார்.
வாக்களிப்புக்கள் மாலை 4 மணியளவில் நிறைவடையும். அதனை தொடர்ந்து வாக்களிப்பு நிலையங்களிலையே வாக்கு எண்ணும் பணிகள் மாலை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments