வேலணை பிரதேச சபையின் தவிசாளராக தெரிவாகியுள்ள சிவலிங்கம் அசோக்குமாருக்கு தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வேலணை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் போது, பிரதேச சபை தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமர் தெரிவு செய்யப்பட்டார். அதனை அடுத்து தொழிலதிபர் சுலக்சன் தனது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தார்.
தொழிலதிபர் சுலக்சனின் வழிகாட்டலில் வேலணை பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேட்சை குழுவில் உறுப்பினராக சிவகாடாச்சம் சிவநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
No comments