2025ம் ஆண்டிற்கான New Generation Asia Awards 2025 நிகழ்வில் தேசிய ரீதியில் வளர்ந்து வரும் புத்தாக்குனருக்கான விருதை ( Emerging Innovator of the year) பிரதி எண்மிய பொருளாதார அமைச்சர் ( Deputy minister of Digital Economy) எந்திரி எரங்க வீரரட்ண மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிட பிரதிநிதி தகாஃபுமி கடோனோ (Takafumi Kadono) மற்றும் சன் மக்ஸ் நிறுவன தலைவர் கௌரி ராஜன் ஆகியோரிடம் இருந்து மதுரா அருந்தவம் பெற்றுக்கொண்டார்.
காலிமுகத்திடல் சங்கரில்லா விடுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்விலேயே விருதினை பெற்றுக்கொண்டுள்ளார்.
இவர் பாடசாலை காலத்தில் மேற்கொண்ட புத்தாக்க செயற்பாடுகளை கருத்தில் கொண்டு இவ்விருது வழங்கப்பட்டது.
அத்துடன் இவரிற்கு இதே நிகழ்வில் வடக்கு மாகாணத்திற்கான சிறந்த இளைஞர் விருதும் வழங்கப்பட்டது
No comments