பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகள் தற்போது துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற நிலையில் துறைமுக பகுதிகள் மோசமாக சேதமடைந்துள்ளன. அத்துடன் , கடல் பகுதிகளில் கற்களும் காணப்படுகிறன.
இந்நிலையில் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கடல் தொழிலுக்கு செல்லும் போது. பல இடர்களை சந்தித்து வருகின்றனர்.
படகுகளை கடலுக்குள் கொண்டு செல்லும் போது கடலின் ஆழம் காணாமை , மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கற்கள் போன்றவற்றால் படகுகள் சேதமடைகின்றமை, போன்ற இடர்களை சந்தித்து வருகின்றனர்.
அதேவேளை மீன் பிடி துறைமுக பகுதிகளையும் புனரமைத்து தருமாறு கடற்தொழிலாளர்கள் கோரி வந்த நிலையில் , தற்போது புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புனரமைப்பு பணிகள் முன்னெடுப்படும் நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , நேரில் சென்று பார்வையிட்டனர்.
No comments