கிருஷாந்தி விவகாரத்தினை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த விவகாரத்தினை நாடாளுமன்றில் பேசுபொருளாக்கி அதனை வெளிக்கொண்டு வந்தது ஈழமக்கள் ஜனநாயக கட்சியே என அக்கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்ச்செல்வம் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் பரப்பிலும் சமூக ஊடகங்கள் மத்தியிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பேசுபொருளாகவே இருக்கின்றனர்.
அண்மைக் காலத்தில் ஊடக நேர்காணல்களிலும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குள் பதுங்கி நின்று டக்ளஸ் தேவானந்தாவின் பெயரை உச்சரிக்கின்றனர்.
சமூக ஊடகங்களிலும் முன்னோட்ட காணொளிகளிலும் , சிறு சிறு வீடியோ தூண்களிலும் டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக சொல்லப்படுகின்ற கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மண்டைதீவில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் மற்றும் காணாமல் போனமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது தலைமையை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இப்பொழுது மண்டைதீவு விவகாரத்தில் அக்கறை கொள்ளுகின்ற ஸ்ரீதரன் எம்.பி, நல்லாட்சி காலத்தில் என்ன செய்து கொணாடிருந்தார்? உண்மையில் மண்டைதீவு விவகாரத்தில் அக்கறை உள்ள ஒருவராக இருந்திருந்தால், தாங்கள் இதயத்தினால் இணைந்திருந்த நல்லாட்சி காலத்தில் விசாரகைளை மேற்கொண்டுஉண்மைகளை கண்டறிந்திருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் அளித்திருக்க வேண்டும். ஆனால் நல்லாட்சி காலத்தில் குறித்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆக, தற்போது மண்டைதீவு பற்றி கதைப்பது அரசியல் நோக்கம் கொண்டதுன்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
இதனைப் புரிந்து கொண்ட நீதியமைச்சர், வெறுமனே அரசியல் நோக்கங்களின் அடிப்படையி்ல் கருத்துக்களை முன்வைக்காது ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை பதிவு செய்யுங்கள் என்று கூறியிருக்கின்றார்.
இவ்வாறான நிலையிலேயே, செம்மணிப் பகுதியில் எலும்புக்கூடுள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் அணையா விளக்குகள் என்ற தொனிப் பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னனெடுக்கப்பட்டு வருகின்றது.
செம்மணிப் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுவது ஆச்சரியான விடயமல்ல. கிருஷாந்தி படுகொலை வக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர்கள், செம்மணிப் பகுதியில் சுமார் 600 இற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருப்பதாக வாக்குமூலம் அளித்திருக்கின்றார்.
1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி விவகாரத்தினை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த விவகாரத்தினை நாடாளுமன்றில் பேசுபொருளாக்கியதன் மூலமும், சர்வதே மன்னிப்பு சபை போன்ற மனித உரிமை அமைப்புகளிதும் அக்கறைக்குறிய விடமாக மாற்றி, அப்போதைய அரசாங்த்திற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தி இருந்தோம்.
பின்னர், செம்மணியில் வெளிப்படையாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எமது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அதுதொடர்பாக சர்வதேச நாடுகளின் இராஜதந்திர மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் தற்போதும், செய்மணி உட்பட மனிதப் புதைகுழிகள் இருப்பதாக சந்தேகப்படுகின்ற அனைத்து இடங்களிலும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவை தொடர்பாக சுயாதீனமான நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவை எந்தக் காலப் பகுதியில் புதைக்கப்பட்டன, அவற்றுடன் சம்மந்தப்பட்டவர்கள் யார்? போன்ற வீடயங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படாமல் இருக்கின்றமையினால், ஈ.பி.டி.பி கட்சியின் அரசியல் நிலைப்பாட்டின் நியாயங்களையும் எம்மால் முன்னெடுக்கப்பட மக்கள் நலன்சார்ந்த வேலைத் திட்டங்களையும் விமர்சிக்க திராணியற்ற அரசியலில் தமது அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத ஆசாமிகளும் தம்மை நிலைநிறுத்த எம்மீதான போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு இவ்வாறான விவகாரங்கள் இலகுவாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என தெரிவித்தார்
No comments