யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட போதை வியாபாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞன் ஒருவர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் கடந்த வாரம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தி , பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள மன்றின் அனுமதியை பெற்று, விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், கந்தரோடை பகுதியை சேர்ந்த இளைஞனை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments