விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் நேற்று பிணையில் செல்ல மன்று அனுமதித்து இருந்த போதிலும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்ட்டிருந்தார்.
இந்நிலையில் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் விடுவிக்கப்பட்டார்
No comments