Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 2ஆயிரத்து 433 பேருக்கு எதிராக நடவடிக்கை


உள்ளூராட்சி மன்ற தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய 2ஆயிரத்து 433 உள்ளூராட்சி வேட்பாளர்களின் பெயர்கள் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாருக்கு அனுப்பப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்  ரத்நாயக்க தெரிவித்தார்.

அறிக்கைகளை சமர்ப்பித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, அந்த வேட்பாளர்கள் மீது பொலிஸார் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 76ஆயிரத்து 992 வேட்பாளர்கள் தங்கள் செலவு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும், அவை மாவட்டச் செயலகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட செலவு அறிக்கைகளில் உள்ள தகவல்கள் குறித்து பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments