யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்றைய தினம் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக யாழ் மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நியமனக் கடிதம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன் உள்ளிட்டோர் பங்குபற்றினார்கள்.
No comments