யாழ்ப்பாணத்தில் சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஆறு ஆடுகளை திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி - தச்சன் தோப்பு பகுதியில் கடந்த வாரம் ஆறு ஆடுகள் களவாடப்பட்டு நிலையில் இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த வாகனங்களின் இலக்க தகட்டு இலக்கத்தின் அடிப்படையில் வாகன உரிமையாளரான துன்னாலை பகுதியைச் சேர்ந்தவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யபட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் , ஆடுகளை திருட பயன்படுத்திய வாகனத்தினையும் , திருடப்பட்ட ஆறு ஆடுகளில் ஐந்து ஆடுகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன் ஆடுகளை திருட ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
No comments