கால்நடை உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களை வளர்த்தெடுப்பதன் ஊடாக எமது மாகாணத்தின் பொருளாதாரமும் மேம்படும். அதேநேரம், கால்நடை வளர்பாளர்களும் நன்மையடைவார்கள் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினர், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினர் ஆகியோருடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கூட்டுறவுச் சங்கங்கள் 1970 – 1980 ஆம் ஆண்டுகளில் கோலோச்சியதைப்போன்ற நிலைமை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.
கால்நடை உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களை வளர்த்தெடுப்பதன் ஊடாக எமது மாகாணத்தின் பொருளாதாரமும் மேம்படும். அதேநேரம், கால்நடை வளர்பாளர்களும் நன்மையடைவார்கள்.
அதை இலக்காகக்கொண்டே இந்தக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என ஆளுநர் தனது ஆரம்ப உரையில் தெரிவித்தார்.
No comments