Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள இராஜேஸ்வரி அம்மனை தினமும் வழிபட அனுமதி


யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபாடு செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். 

இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 








No comments