Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடமாகாண பாடசாலை உணவுத் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்


வடக்கு மாகாணத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பாடசாலை உணவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கிராமிய சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின்  செயலர் சம்பத் மந்திரிநாயக்க, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெயராணி பரமோதயன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஆ.சிறி, பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - திட்டமிடல் பணிப்பாளர் கே.சிவச்சந்திரன், பிரதித் திட்டப் பணிப்பாளர்  கே.நிறஞ்சலா, தேசிய உலக உணவு நிகழ்ச்சி திட்ட  ஒருங்கிணைப்பாளர் முஸ்தபா நிஹமத் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

2023ஆம் ஆண்டிலிருந்து வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் திட்டத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பிலும் திட்டத்தின் நடைமுறையாக்கலிலுள்ள சவால்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. 


No comments