காங்கேசன்துறை நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை நேற்றைய தினம் புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து கடந்த 13ஆம் திகதி முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை திரும்பப் பெற்றது. இதையடுத்து, காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை நேற்றைய தினம் வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
No comments