Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழ் தேசிய பேரவையிடமிருந்து கைநழுவிய சாவகச்சேரி பிரதேச சபை


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனும் முன்மொழியப்பட்டனர்.

இதில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனுக்கு ஆதரவாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 5 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனுக்கு ஆதரவாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த செல்வரத்தினம் ஆணந்தகுமார் ஏனும் உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர்.

அத்தோடு அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த யோகநாதன் கல்யாணி எனும் உறுப்பினருக்கு நீதிமன்றம் இடைக்கல தடை விதித்துள்ளது.

போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் தலா 10 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச் சீட்டு மூலம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இடம்பெற்ற பிரதித்  தவிசாளர் தெரிவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை இராமநாதன் யோகேஸ்வரன் 11 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

28 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபைக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 7 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் 5 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினரும் நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments