வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது மிளகாய் தூள் வீசி , கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
தனது பிள்ளைகளை பாடசாலையில் இறக்கி விட்டு , மோட்டா சைக்கிளில் , வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் மீது கட்டுடை பகுதியில் , பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் மிளகாய் தூளை வீசியுள்ளனர்.
அதனால் , நிலை தடுமாறு விபத்துக்களானவர் மீது கூரிய ஆயுதத்தால் , சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டு விட்டு இரு நபர்களும் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் , காணப்பட்டவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments