இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்யதனர்.
மன்னார் கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகினையும் மன்னார் தாழ்வுப்பாடு பகுதிக்கு கொண்டு வந்த கடற்படையினர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கையளித்துள்ளனர்.
No comments