IMF விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த கட்ட தவணையைப் பெற மின்சாரக் கட்டணத்தை 18% ஆல் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இது உண்மையா என்பதை தெரியப்படுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்குமா என்பதையும், IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த தவணை கிடைக்கப்பெரும் திகதி யாது என்பதையும் தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
No comments