முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சிலாவத்தை பகுதி மக்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்ற நிலையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் காணி அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டது.
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரினால் காணி உரிமையாளர்களுக்கு காணி சுவீகரிப்பு தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள், அரச நிலஅளவையாளர் கி.கிருஸ்ணராசா, சிலாவத்தை கிராம சேவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்த போது காணியின் உரிமையாளர்கள் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். இதனால் காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சிலாவத்தை கிராமத்தில் சிலாவத்தை கடற்படை முகாம் 2009 ஆண்டு போருக்கு பின்னர் நீண்ட காலமாக அமைந்துள்ளது.
No comments