Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, June 30

Pages

Breaking News

யாழ்.போதனா தன்னார்வ ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தன்னார்வ அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன்படி அவர்களின் பணிப்பிரிவின் கீழ் எதிர்காலத்தில் ஆட்சேர்ப்புகள் இடம்பெறுமாக இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று  ஊடகம் மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி  வேளையின் போது யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.