Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை


கொழும்பு - யாழ்ப்பாண விமான சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை பரீட்ச்சார்த்த சேவையாக நடைபெற்றது. 

டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.  

இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட  தகுதிகாண் விமான சேவை இன்றைய தினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையதிற்கு சேவையில் ஈடுபட்டது. .

 இலங்கை விமான சேவைகள் அதிகார சபை தலைமை அதிபதி கப்டன் தமிந்த றம்புக்வெல கருத்து தெரிவிக்கையில், 

 இரண்டு வருடங்களின் பின்னர் கொழும்பு -  யாழ்ப்பாண விமான  சேவை ஆரம்பிக்கப்படுகிறது . எமது நோக்கம் இலங்கைக்குள் உள்நாட்டு விமான சேவைகளை வளர்ப்பதாகும் . 

அதன் அடிப்படையில் டேவிட் பிரிஸ் குழுமத்தினரால்  முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தகுதி கான் சேவை பரிசோதிக்கப்பட்டது.

இதற்கமைவாக அனைத்து பரிசோதனை நடவடிக்கைகளிலும் டேவிட் பிரிஸ் விமான சேவைகள் சித்தி பெற்றுள்ளது . 

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான கட்டுமாணங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பூர்த்தி செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது.  

டேவிட் பிரிஸ் விமான சேவைகள் நிறுவனம் தமது சேவைக்கான  கோரிக்கையை விண்ணாப்பிக்கும்  பட்சத்தில் நாங்கள் அதனை அனுமதிப்பதற்கு தயாராக இருக்கின்றோம் . 

இதேவேளை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தின் ஊடாக எந்த ஒரு நாட்டிற்கும் இந்த விமான சேவையின் ஊடக பயணித்து தாங்கள் விரும்பிய சேவையின் மூலம் பயணிப்பதற்கு  சேவைகளை விஸ்தரிக்க உள்ளோம் என மேலும் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த டேவிட் ஃபீரிஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானி இந்த சேவையினை வாராந்தம் மூன்று நாட்கள் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம் . 

இருவழி கட்டணமாக 68,000 ரூபாய் அறவிடப்படும் . ஏழு கிலோ கிராம் பயணிகள் பொதி அனுமதிக்கப்படும்  இதேவேளை 11 பயணிகள் இந்த சேவையின் மூலம் பயணம் செய்ய முடியும் .பயண நேரமானது ஒரு வழிக்கு 1 மணத்தியாலம் 10 நிமிடம் தேவைபடும் 

வெகுவிரைவில் விமான சேவைகள் போக்குவரத்து அதிகார சபைக்கு கட்டுநாயக்கா வரை சேவையை விசாரிப்பதற்கு நாம் விண்ணப்பிப்பதற்கு தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார். 




No comments