Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இளம் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த பின் தன் உயிரை மாய்த்த இளைஞன்


அம்பாறையில் இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை  செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்திய  பின்னர் , இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த சரோஜா உதயங்கனி (வயது 23) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணை கொலை செய்த பின்னர் இளைஞனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments