Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

உணவு பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு


இலங்கையில் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து யாழ் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குறித்த செயலமர்வில் சுகாதார அமைச்சின் பிரதம உணவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி சுதர்சன், வடக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கருத்துரை வழங்கியிருந்தனர்.

குறித்த செயலமர்வு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு , ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.






No comments