ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் இன்றைய தினம் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக வாசித் மாகாண ஆளுநர் முகமது அல்-மியாஹி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.
ஒரு கட்டிடத்தின் பெரும்பகுதி தீப்பிடித்து எரிவதையும், புகை மூட்டங்கள் வெளியேறுவதையும் காட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தளங்களில் வௌியாகியுள்ளன.
No comments