Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இனிய பாரதியின் சாரதி கைது!


கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும்  கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை இன்று குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கணகர் வீதி தம்பிலுவில் பகுதியை சேர்ந்த  செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் இவ்வாறு கைதானவர் ஆவார்.

கைதானவர் கடந்த  2007 2008 2009 காலப்பகுதியில் இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.அத்துடன் தற்போது அவர் பொத்துவில்-மட்டக்களப்பு வழித்தட பேருந்து சாரதியாக செயற்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் பொத்துவில் பகுதியில் இருந்து வழமை போன்று  கல்முனை ஊடாக மட்டக்களப்பிற்கு செல்லும் போது  கல்முனை பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில்  காத்திருந்த குற்றப்பலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்ததுடன்  அம்பாறைக்கு மேலதிக விசாரணைக்காக அழைத்து  சென்றுள்ளனர்.

No comments