கடற்தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இதற்காக பொருத்தமான நபர்களை அடையாளம் காணுவதற்காக தற்போது அறிவுறுத்தப்பட்டு வருவதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி தெரிவித்தார்.
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள கடற்தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயலிழக்கச் செய்யப்பட்டபோது, சுமார் 60,000 கடற்தொழிலாளர்கள் இதன் மூலம் பலன்களைப் பெற்று வந்ததாக தலைவர் கூறினார்.
அதன்படி, இந்த ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் போது, அந்த எண்ணிக்கையை விட அதிகமானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி மேலும் தெரிவித்தார்.
No comments