Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் தீ


நல்லூர் ஆலயத்திற்கு சுற்றுலா வந்தவர்களின் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தமையால் , சிறிது நேரம் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

தென்னிலங்கையில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள் , நல்லூர் முத்திரை சந்தி பகுதியில், பேருந்தினை நிறுத்தி விட்டு , நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். 

சாரதி பேருந்தில் இருந்த நிலையில் , திடீரென பேருந்து தீ பற்றியுள்ளது. விரைந்து செயற்பட்ட சாரதி தீயினை அணைக்க முற்பட்ட வேளை அது பயனளிக்காத நிலையில் ,அவ்விடத்தில் நின்றவர்கள் , யாழ் . மாநகர சபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயினை அணைத்தனர். 

தீயணைப்பு படையினரின் விரைவான செயற்பாட்டினால் , பேருந்தினுள் தீ பெருமளவுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது. 





No comments