Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கடன் வாங்கியவர் கூரிய தாக்கியதில் கடன் கொடுத்தவர் உயிரிழப்பு


கொடுத்த கடன் காசை திருப்பி வாங்க சென்ற இளைஞனை கடன் வாங்கிய நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கடன் கொடுத்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நாவுல பொலிஸ் பிரிவின் நிகுல பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். 

கடனாக வழங்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. 

இறந்தவர் தம்புள்ளை, களுந்தேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக நிகுல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments