Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

விவசாய நடவடிக்கைக்காக சென்ற தாயும் மகளும் யானை தாக்கியதில் உயிரிழப்பு


குருநாகல் - மஹாவ பகுதியில் பயிர்களுக்கு மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர். 

மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த தக்ஷிலா சுபாஷினி (வயது 28) மற்றும் அவரது தாயார் இனோகா குமாரி (வயது 58) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

தாக்குதலுக்குள்ளான மகளையும் தாயையும்  அப்பகுதி மக்கள் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

எனினும் மகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயமடைந்த தாய், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.

No comments