"குமணனை அச்சுறுத்தாதே .... " என கோரி ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்
நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க. குமணனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த 17ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்திற்கு வரவைத்து , சுமார் 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போது, முன்னிலையாக வேண்டும் எனவும் , விசாரணை விடயங்கள் தொடர்பில் வெளியில் கூற கூடாது எனவும் கடுமையாக அறிவுறுத்தியே குமணன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments