Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். இருந்து சென்ற தபால் புகையிரதம் பழுது - 3 மணி நேர தாமதத்தின் பின் பயணத்தை தொடர்ந்த பயணிகள்


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்ட தபால் புகையிரதம் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அருகில் இயந்திர கோளாறு காரணமாக பழுதடைந்தது. 

அதன் காரணமாக கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் சுமார் 3 மணி நேர தாமதத்தின் பின்னரே தமது பயணத்தை தொடர்ந்தனர் 

காங்கேசன்துறையில் இருந்து நேற்றைய தினம் இரவு 8 மணிக்கு புறப்பட்ட புகையிரதம் கரடிப்போக்கு சந்திக்கு அருகில் இரவு 9.30 மணியளவில் பழுதடைந்தது. 

பழுதடைந்த இயந்திரத்தை திருத்த முயன்று , அது பயனளிக்காத நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை  அதிகாலை 12:30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து சென்ற மற்றுமொரு இயந்திரம் மூலம் தொடருந்து, கொழும்பை நோக்கிப் புறப்பட்டது.

இதனால் பயணிகள் சுமார் 03 மணி நேர கால தாமதத்தின் பின்னரே தமது பயணத்தை தொடர்ந்தனர். 

No comments