யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் வியாழக்கிழமை வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளதுடன் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
குப்பிளான் ஜே/211 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்றின் முன்பாக நின்ற பனை மரம் , கடும் காற்று காரணமாக முறிந்து விழுந்ததில் வீடும் காரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதனால் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்
No comments